திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை உள்ள கரியாம்பட்டி சேர்ந்தவர் இளையராஜா 33. இவர் நிலக்கோட்டை காய்கறி
மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் கரியாம்பட்டி க்கு செல்லும் வழியில் வெள்ளத்தாதன் பட்டி பிரிவு அருகே மதுரை ரோட்டில் சென்ற போதுஅதே ரோட்டில் மதுரையை நோக்கி சென்ற ஒரு லாரி மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் நிலைதடுமாறிய இளையராஜா லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்., விபத்தில் பலியான இளையராஜாவுக்கு தனலட்சுமி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளார்கள்.
நிலக்கோட்டை அருகே லாரி மோதி காய்கறி வியாபாரி பலி.
எழுதியவர்: mohan September 15, 2019, 12:33 pm




You must be logged in to post a comment.