மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமணையில் ரூ 275 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள கூட்டுப்பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, அவசர பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு போன்ற பிரிவுகளுக்கு தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய கட்டிடங்கள் கட்டப்படவுள்ள. இதற்கு தமிழக அரசால் அரசானை வெளியிட்டு கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி தலைமையில் பூமிபூஜை செய்து பணிகள் தொடங்கினர். இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி அதிமுக நகர செயலாளர் பூமாராஜா, மற்றும் நிர்வாகிகள் துரைதனராஜ், பால்பாண்டி மற்றும் அரசு மருத்துவர்கள், சுகாதார துறை அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி அரசுமருத்துவமணையில் ரூ 275 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள நிலையில் பூமிபூஜை சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி தலைமையில் நடைபெற்றது.
எழுதியவர்: mohan September 14, 2019, 5:48 pm




You must be logged in to post a comment.