திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் அடுத்த வலையாம்பட்டு கிராமத்தில்அம்பேத்கர் சிலை எதிரே உள்ள தெருவில் பல மாதங்களுக்கு முன்பாக போடப்பட்ட மின்கம்பம் தற்போது வீட்டின்அருகில் சாய்வாக உள்ள நிலையில் அதன் ஒயர் வீட்டின் மாடியில் போவதால் வீட்டின் பிள்ளைகள் மாலை நேரங்களில் விளையாடும் போது ஒயரை பிடித்து விளையாடுவதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பயத்தால் மாடிக்கு அனுப்புவதில்லை, இதனால் அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததில்லை, இதனால் இப்பகுதியிலுள்ள மின்கம்பத்தை எந்தவித ஆபத்தும் ஏற்பட்டு முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பு!!
திருவண்ணாமலை மாவட்டம் , செங்கத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பம்!! அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா???
எழுதியவர்: mohan September 14, 2019, 2:14 pm




You must be logged in to post a comment.