திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த புலவன்பாடி கிராமத்தில் 500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.சிதலமடைந்து காணப்பட்ட இந்த திருக்கோவிலை கிராமமக்கள் ஒன்று கூடி புனரமைப்பு பணிகள் செய்து வண்ணங்கள் தீட்டி நிறைவுபெற்று கணபதி பூஜையுடன் தொடங்கி மூன்றுகால யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகாபூர்னாகிதி மகாதீபாரதனை நடைபெற்றது. தொடங்கியது.
யாகசாலையில் வைத்து வேதவித்தகர்களால் மந்திரங்கள் ஓதி பூஜிக்கப்பட்ட புனிதநீர்கலசம் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு கோபுரகலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி மஹாகும்பாபிஷேகம் மஹாதீபாராதனை வெகுசிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் இராணிப்பேட்டை தொழிலதிபர் கணபதி – இந்திராணி குடும்பத்தினர், ஆரணி பிரபல ஜோதிடர் திலகம் குமரேசன், நடராஜமுதலியார், கிளைக்கழக அவைத்தலைவர் கே. இராமச்சந்திரன், ஊராட்சிக் கழக செயலாளர் பி.கே. வினாயகம், ஒன்றிய பிரதிநிதி ஆர்.சுரேஷ்ராஜா விழாக்குழுவினர்கள் தயாளன், பி.லோகநாதன், எ.ஆறுமுகம், எஸ்.பச்சையப்பன், பி.கலைச்செல்வன், எஸ். வஜ்ஜிரவேலு, ஏழுமலை, பி.சக்தி, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




You must be logged in to post a comment.