தேனி மாவட்டம் கம்பத்தில் நாம்தமிழர் கட்சியினர் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.தேனி மாவட்டம், கம்பத்தில் கடந்த சில தினங்களாக காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனையடுத்து கம்பம் நகர நாம்தமிழர்யினர் தாமாக முன்வந்து கம்பம்உழவர் சந்தை அருகே பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் இரண்டு நாட்களாக வழங்கினர்.இந்நிகழ்வில் நகர செயலாளர் தங்கபாண்டி தொகுதி துணைத்தலைவர் கார்த்திபன் துணை செயலாளர் அழகுராஜா, வீரத்தமிழர் முன்னணிகம்பம் ஒன்றியத்தலைவர் மணிகண்டன் ஒன்றிய செயலாளர் ராம்குமார் கம்பம் வீரத்தமிழர் முன்னணி நகர செயலாளர் சதீஸ்குமார் மற்றும் நிர்வாகிகள் ஜெகதீஷ் , ஷாஜகான், லெட்சுமணன், வீரமணி , சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். \
சாதிக் பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்




You must be logged in to post a comment.