மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் வடக்கு தாலுகா வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான லைசென்ஸ், பழகுனர் உரிம், பதிவு எண் போன்றவை பெறுவதற்காக ஏராளமானோர் வருகின்றனர். அவ்வாறு வருபவர்களிடம் பணியை விரைந்து உரிமத்தை வழங்க சில ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து வட்டார போக்குவரத்து உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மேற்பார்வையாளர் உட்பட 3 நிரந்தர ஊழியர்கள், 2 தற்காலிக ஊழியர்கள் என 5 பேர் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. 5 பேரையும் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வி காளமேகம்




You must be logged in to post a comment.