கன்னியாகுமரி மாவட்டம் 24.08.2019 அன்று நாகர்கோவில் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (53) இவர் தனது தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு பழம் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த வழுக்கம்பாறையை சேர்ந்த ராஜா (30) என்பவருக்கும் இடையே பழம் வாங்குவதில் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜா செல்வத்தை கையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து கீழே தள்ளிவிட்டார். இதில் செல்வத்தின் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் செல்வத்தின் மனைவியின் புகாரின் பேரில் கோட்டார் காவல் நிலைய ஆய்வாளர் அன்புபிரகாஷ் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தார்.
செய்தி வி காளமேகம்




You must be logged in to post a comment.