தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்க்குட்பட்ட ஜெர்தலாவ் ஊராட்சி , கொலசன அள்ளி ஊராட்சி, பி.செட்டி அள்ளி ஊராட்சி , புலிகரை ஊராட்சி மற்றும் பாலக்கோடு பேரூராட்சி உள்ளிட்ட 5 இடங்களில் தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் நடைப்பெற்றது.இம்முகாமிற்க்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி) சந்தானம், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கீதா, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் பாபு, மாவட்ட தாட்கோ மேலாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தார் இம்முகாமில் பொது சுகாதாரம் சாலைகள் தெருவிளக்குகள் மருத்துவம் குடிநீர் வழங்குதல் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் பட்டா மாற்றம் சாதிச்சான்று இருப்பிட சான்று முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் மனுக்கள் அளிக்க ஆர்வத்துடன் வந்திருந்தனர் அவர்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு தாசில்தார் வெங்கடேஸ்வரன் மாற்று திறனாளி அலுவலர் திலகவதி ஊராட்சிகள் துறை உதவி தேசிய நெடுஞ்சாலைத்துறை தனி வட்டாட்சியர் சரவணன் தோட்டக்கலை உதவி அலுவலர் கோபால கிருஷ்னன் வேளாண்மைத்துறை உதவி அலுவலர் விஜயன் வருவாய் ஆய்வாளர்கள் சித்ரா, ஞானதீபன், திலகவதி கிராம நிர்வாக அலுவலர்கள் துரைராஜ், சாம்ராஜ், முனியம்மாள், முருகேசன், பிரபு, வெங்கடேசன், சிவசங்கர் ஊராட்சி செயலாளர்கள் சஞ்சீவன், தாமோதிரன், மற்றும் அனைத்து துறையை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர் .
தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம்
எழுதியவர்: mohan August 26, 2019, 3:29 pm




You must be logged in to post a comment.