உசிலம்பட்டியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் நிர்மலாதேவியைக் காணவருவது வழக்கம். இவர் தன்னை நிர்மலாதேவியின் ரசிகர் எனக் கூறிக்கொள்கிறார். நேற்று 20.08.19நடைபெற்ற வழக்கு விசாரணையின்போதும் அன்பழகன் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். ஆனால் நிர்மலா தேவி வராததால் அவர் அதிருப்தியடைந்த அவர் நிர்மலாதேவி உடல்நலம் பெறவும், வழக்கிலிருந்து விரைவில் விடுதலையாக வேண்டியும் நிர்மலாதேவி எந்த இடத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டாரோ அதே இடத்தில் அமர்ந்து ஒரு நிமிடம் தியானம் செய்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. அதன் பின் அந்த இளைஞர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
பேராசிரியை நிர்மலாதேவியின் தீவிர ரசிகன் தியானம்
எழுதியவர்: mohan August 21, 2019, 11:22 am




You must be logged in to post a comment.