திருவண்ணாமலை – திண்டிவனம் சாலை, ரயில்வே கேட் அருகில் கூட்ஸ் ரயிலில் அடிபட்டு முதியவர் பலியானார். திருவண்ணாமலை அடுத்த கச்சிராப்பட்டு கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி (80) என்பவர், திண்டிவனம் சாலையில் உள்ள கிரேஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வந்துள்ளார். வரும்போது, ரயில் பாதையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, விழுப்புரம் மார்க்கமாக சென்ற கூட்ஸ் ரயில் அவர் மீது மமோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை ரயில்வே பபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
எழுதியவர்: mohan August 19, 2019, 5:24 pm




You must be logged in to post a comment.