திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை திண்டுக்கல் ராஜேந்திரா தியேட்டரில் 2-வது ஷோ படத்தை பார்த்து விட்டு வெளியே வரும்பொழுது வேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்துக்குள் புகுந்தது. இதில்10 -க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். காயம்அடைந்த 7 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டனர். தாமரைப்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு கூடுதலாக அடிபட்டதால் இவர் மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் கடந்த 7 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திண்டுக்கல்லில் அஜித் படம் பார்த்து விட்டு தியேட்டரில் இருந்து வெளியில் வரும்போது விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
எழுதியவர்: mohan August 19, 2019, 11:39 am




You must be logged in to post a comment.