17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » ராஜஸ்தான் மாநிலத்தில் கொய்யா விளைச்சல் அமோகம்.விவசாயிகள் மகிழ்ச்சி..

ராஜஸ்தான் மாநிலத்தில் கொய்யா விளைச்சல் அமோகம்.விவசாயிகள் மகிழ்ச்சி..

எழுதியவர்: mohan August 16, 2019, 12:51 pm
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.இது யாருக்கு மகிழ்ச்சி அளித்ததோ இல்லையோ சாவாய் மாதோபுர் கிராம   விவசாயிகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது..ஆம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சாவாய் மாதோபுர் கிராம பகுதிகளில் விளையும் கொய்யா பழங்கள் வட மாநிலங்களிலில் பிரசித்தி பெற்றவை.இங்கு விளையும் கொய்யா பல பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகின்றது.கடந்த மாதத்தில் மழை இல்லாததால் விளைச்சலில் பாதிப்பு ஏற்ப்பட்டது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கொய்யா பழங்கள் அமோக விளைச்சலைக் கண்டுள்ளன.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனா்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!