18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் மக்களை திரட்டி மின்வாரியத்திடம் புகார் அளித்த தவ்ஹீத் ஜமாத்… நாளை (12/07/2019) போராட்டம் அறிவிப்பு..

கீழக்கரையில் மக்களை திரட்டி மின்வாரியத்திடம் புகார் அளித்த தவ்ஹீத் ஜமாத்… நாளை (12/07/2019) போராட்டம் அறிவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் July 11, 2019, 1:13 pm

கீழக்கரையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மின்சாரம் தடைபட்டுள்ளதால். பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்த  மின் தடையினால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், வியாபாரிகள். மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதற்கு தீர்வு காணும் வண்ணம்  தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் இன்று (11/07/2019) 40க்கும் மேற்பட்ட அனைத்து கிளை நிர்வாகிகளுடன் கீழக்கரை மின்சார வாரியம் அலுவலகம் சென்று மின்தடை குறித்து சரியான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும். உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதே நிலை தொடரும் என்றால் அதிகமான மக்களை திரட்டி மாபெரும் முற்றுகைப் போரட்டம்  நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!