இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில்பைபர் படகு மூலம் 04/7/2019 ஆம் தேதி காலை அந்தோணி, மியோன், வின்தாஸ் , ஸ்டீபன் ஆகியோர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்தபோது காற்றின் வேகத்தால் 4 மீனவரும் மாயமாகினர். மீனவர்களைதேடி வந்த நிலையில் ஸ்டீபன், அந்தோணி ஆகியோர் ஜெகதாப்பட்டிணத்திற்கு வந்து சேர்ந்தனர். மாயமான இரண்டு மீனவரை தேடி வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மீனவர்களின் குடும்பத்தினரை ஆட்சியர் வீரராகவ ராவ் ஆறுதல் கூறினார். மாயமான 2 மீனவரை கப்பல், 2 விமானம் மூலம் தேடி வருவதாக தெரிவித்தார்.




You must be logged in to post a comment.