திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை அருகே கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சியில்உள்ள அப்பிநாயக்கன்பட்டி கண்மாயில் 100 நாள் வேலை ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.இந்த வேலையாட்களில் ஒருவராக முத்தம்மாள் வயது 55. என்பவர் வேலை செய்து கொண்டு இருந்தார்.. அப்போது திடீரென வாயில் ரத்த ரத்தமாக வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தார். மயங்கி விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாா். இச்சம்பவம் அறிந்த நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகலட்சுமி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்கள் பலர் நேரில் சென்று இறந்துபோன குடும்பத்திற்கு ஆறுதலும் உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்வதாக உறுதி அளித்தனர்.
நிலக்கோட்டை அருகே 100 நாள் வேலை செய்த மூதாட்டி மயங்கி விழுந்து சாவு
எழுதியவர்: mohan July 3, 2019, 10:07 am




You must be logged in to post a comment.