கீழக்கரை கலங்கரை விளக்கம் ஒட்டியுள்ள கடற்கரை பகுதி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதைகள் மற்றும் இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து இருந்ததால் பொதுமக்கள் நடமாட மிக சிரமமாகவும், சமூக விரோதிகளுக்கு கூடாரமாகவும் விளங்கியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கீழக்கரை டூரிஸம் என்ற அமைப்பின் தீவிர முயற்சியில் கீழக்கரை நகராட்சியின் ஒப்புதலோடு, சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை – கீழை நியூஸ் நிர்வாகத்தினர் உதவியுடன்
அப்பகுதியில் பல ஆயிரம் மதிப்புள்ள மொத்தம் 7 சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதர்பார்க்கப்படுகிறது.




You must be logged in to post a comment.