இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அருகே முனைக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவசக்தி இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அகதி ஒருவரை சட்ட விரோதமாக படகில் ஏற்றி சென்ற மண்டபம் பகுதியை சேர்ந்த இரண்டு படகு ஓட்டிகள் உள்பட 3 பேர் மற்றும் ஒரு நாட்டு படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாம் அழைத்து சென்றனர். தனது படகு மாயம் என படகு உரிமையாளர் சிவசக்தி, மண்டபம் மெரைன் போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மண்டபம் – இலங்கை கடற்படையினரிடம் நாட்டுப் படகுடன் 3 பேர் சிக்கினர் .
எழுதியவர்: mohan June 26, 2019, 7:12 pm




You must be logged in to post a comment.