உசிலம்பட்டி அருகே சேம்பரில் நடிகர் விஐய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 5000பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகமெங்கும் நடிகர் விஐய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகளை செய்து வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேம்பரில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி விஜய் ரசிகர் மன்ற தலைவர் விருமாண்டி தலைமையில் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏழை மாணவர்களுக்கு நோட்டுபுத்தகம் மற்றும் அங்குள்ள விநாயகர் கோவிலில் மழைவேண்டி சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்நிகழ்ச்சியில் விஜய் ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் திருப்பதி ஏற்பாடுகளை செய்தார். இதில் விஜய் ரசிகர் மன்ற தலைவர் விமான்டி பொருளாளர், கார்தி செயலாளர், பிரேம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.







You must be logged in to post a comment.