18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உடலும் ,மனமும் புத்துணர்வு பெற யோகா செய்யுங்கள்..தேவகோட்டை காவல் ஆய்வாளர் பேச்சு

உடலும் ,மனமும் புத்துணர்வு பெற யோகா செய்யுங்கள்..தேவகோட்டை காவல் ஆய்வாளர் பேச்சு

எழுதியவர்: mohan June 21, 2019, 10:53 am

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் , காவல் சார்பு ஆய்வாளர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் .தேவகோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் கீதா தலைமை தாங்கி பேசுகையில் , உடலும் ,மனமும் சேர்ந்து புத்துணர்வுடன் இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும்.அதற்கு அனைவரும் இளம் வயது முதலே யோகாவை கற்றுக்கொண்டு தினமும் யோகா செய்ய வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்து நன்றாக வெளிவிட்டால் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும்.ஆயுட்காலம் கூடும்.அது யோகவினால்தான் முடியும்.இவ்வாறு பேசினார்.மாணவர்களின் யோகா நிகழ்வும் நடைபெற்றது.காவலர் அந்தோணிராஜ் உட்பட பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர்.நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!