மன்னர் ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குநர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன் மன்னர் ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் தமிழகமெங்கும் அவருக்கு கண்டனங்கள் வழக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மூவேந்தர் முன்னேற்றக்கழகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் சுதர்சன் தலைமையில் கட்சினர் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.







You must be logged in to post a comment.