18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேடசந்தூர் ஆத்துமேடு அரசு மதுபான விடுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை அதிகாரிகள் சோதனை..

வேடசந்தூர் ஆத்துமேடு அரசு மதுபான விடுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை அதிகாரிகள் சோதனை..

எழுதியவர்: ஆசிரியர் May 16, 2019, 3:35 pm

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் அமைந்துள்ள 3223 என்ற எண் உள்ள அரசு மதுபான கடையில் சட்டவிரோதமாக இயங்கி வரும் மதுபான விடுதியில் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக பல்வேறு தரப்பில் இருந்து காவல்துறைக்கு புகார் வந்தது.

இதனால்  அவ்வழியாக செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்௧ள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!