மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள பில்டர் சாலையில் அரசு பஸ் மோதியதில் இருவர் பலி ஆகியுள்ளனர்.
மதுரை மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த வினோத் வயது 21 மற்றும் பாண்டி செல்வம் வயது 26 இருவரும் கட்டிட தொழிலாளர்கள். நாகமலை புதுக்கோட்டை பில்லர் சாலை அருகே வரும் போது மதுரையில் இருந்து மூணார் செல்லும் அரசு பேருந்து மோதியதில் அருகில் உள்ள தடுப்பு சுவற்றில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
உடல்களை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.