17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் அபே ஆட்டோ, டாட்டா ஏசி, லாரி மோதி விபத்து.. ஒரு பெண் பலி.., 5 பேர் படுகாயம்..

உசிலம்பட்டியில் அபே ஆட்டோ, டாட்டா ஏசி, லாரி மோதி விபத்து.. ஒரு பெண் பலி.., 5 பேர் படுகாயம்..

எழுதியவர்: ஆசிரியர் April 29, 2019, 9:12 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோடு ஆர்.சி.பள்ளி அருகில் உசிலம்பட்டியிலிருந்து தொட்டப்பநாயக்கணூர் சென்ற அபே ஆட்டோ மீது டாடா ஏசி வாகனமும் நேருக்கு நேர் மோதிய நிலையில் கீழே விழுந்த நபர்கள் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது..

இதில் ஆட்டோவில் பயணித்த தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த காத்தம்மாள் என்ற பெண் உடல் நசுங்கி படுகாயமடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு, மேலும் மாதரையைச் சேர்ந்த பஞ்சம்மாள், யோகராணி, கார்த்திக் மற்றும் இடையபட்டி ரேணுகா, மாலைப்பட்டி சாமிராஜா உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது…

இச்சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!