இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பெரியபட்டினம் இந்திரா நகர் கடற்கரை ஓரமுள்ள ஊரணியில் பெண்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அது வழியாக இரு சக்கர வாகனங்களில் சென்ற வாலிபர்கள் பெண்கள் குளிப்பதை ரசித்தனர்.
இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்களை பெரிய பட்டினத்தைச சேர்ந்த வாலிபர்கள் அடித்து விரட்டினர். இதில் முத்தரையர் நகர் குண்டுமணி மகன் முத்துகுமார் 24, தலைக் காயம், கணேசன் மகன் தென்னவன் 21, நாகு மகன்கள் ஜெகதீஷ் 20, அஜீத் 18 லேசான காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 10 பேரை கம்பு, கத்தியுடன் பெரிய பட்டினம் சென்றனர். அவர்களை பெரிய பட்டினத்தை சேர்ந்த ஒரு சமூகத்தினர் விரட்டி அடித்தனர். தென்னவன், ஜெகதீஷ், அஜீத் ஆகிய மூன்று பேரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து திருப்புல்லாணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.




You must be logged in to post a comment.