சமீபத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகம் மற்றும் அச்சமுகத்தைச்சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் வெளியிட்டவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும், பொன்னமராவதி கிராமத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்த ஆயிரம் பேரின் வழக்கை நிபந்தனையின்றி ரத்து செய்ய வழியுறுத்தியும், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே குறிப்பிட்ட சமூக மக்கள் இன்று (23/04/2019) மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் சமாதானம் பேசி கலைந்து போக வைத்தனர். இச்சம்பவத்தால் மதுரை-ராமேஸ்வரம் தேசிய சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.




You must be logged in to post a comment.