18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி பூமார்கெட்டில் சுமை தூக்கு தொழிலாளிகள் குடிபோதையில் தகராறு.. ஒருவருக்கு கத்திக்குத்து..

உசிலம்பட்டி பூமார்கெட்டில் சுமை தூக்கு தொழிலாளிகள் குடிபோதையில் தகராறு.. ஒருவருக்கு கத்திக்குத்து..

எழுதியவர்: ஆசிரியர் April 20, 2019, 6:52 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பூ மார்க்கெட்டில் லோடுமேன்கள் மதுரை ராகவன் – கருகப்பிள்ளை ஆறுமுகம் ஆகிய இருவரும் உசிலம்பட்டி பூ மார்கெட்டில் லோடுமேன் வேலை பார்த்து வந்துள்ளனர். சம்பவத்தன்று இருவரும் குடி போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் ஆறுமுகம் ராகவனை கத்தியால் குத்தியுள்ளார். ராகவன் ஆறுமுகத்தை சாக்கு தைக்கும் ஊசியால் குத்தியுள்ளார்.

சம்பவமறிந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் இருவரையும் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராகவன் மதுரை அரசு மருத்துவமனணக்கு கொண்டு செல்லப்படடார். இது தொடர்பாக போலிச்சார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!