திருப்புல்லாணி அருகே உள்ள வண்ணாங்குண்டு அரசு மேல் நிலைப் பள்ளி 2018-19 கல்வியாண்டு பிளஸ் 2 தேர்வில் நூறு 100 % சதவீத தேர்ச்சியும் இராமநாதபுரம் மாவட்டத்தில் 16 வது இடத்தையும் பெற்றுள்ளது.
நூறு சதவீத தேர்ச்சிக்கு அயராது பாடுபட்ட பள்ளி தலைமை ஆசிரியை அவர்களுக்கும் பணிபுரியும் ஆசிரிய பெருந்தகைளுக்கும் இந்தாண்டு 100 % தேர்ச்சி வரும் ஆண்டுகளிலும் தொடர வேண்டும் என வணணாங்குண்டு சுற்று வட்டார் மக்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் வண்ணாங்குண்டு இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பல்லாயிரம் ரூபாய் கட்டணமாக வசூல் செய்து சில மாணவர்களின் வெற்றியை கொண்டாடி வரும் தனியார் பள்ளிகளுக்கு மத்தியில் அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது பாராட்டுதலுக்குரிய செயலாகும்.
செய்தி:- SH.Basith, வண்ணாங்குண்டு, துபாயிலிருந்து..



You must be logged in to post a comment.