கீழக்கரை நகராட்சிக்கு ஒரே ஒரு கேள்வி…
கீழக்கரை நகருக்கு விடிவு காலம் பிறக்குமா??
கீழக்கரை நகராட்சிக்கு ‘ஒரே ஒரு கேள்வி‘ – அதற்கு மட்டும் பதில் தந்தால் போதும் – தகவல் அறியும் உரிமை சட்டத்தின் துணை கொண்டு சாமானியர்கள் அதிரடி ! கீழக்கரை மக்கள் களம் சார்பாக, கீழக்கரை பகுதியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், இலவச பயிற்சி வகுப்புகளும் நடை பெறுகிறது. இதனால் நகரின் இளைஞர் பட்டாளம் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வினை அடைந்து வருகின்றனர். தற்போது கீழக்கரை நகராட்சிக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக இளைஞர்கள் பல கேள்விகளை, தங்கள் வார்டு சம்பந்தமாக கேட்க ஆரம்பித்துள்ளனர். தற்போது கீழக்கரை நகராட்சிக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் துணை கொண்டு ‘ஒரே ஒரு கேள்வி‘ மட்டும் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் தந்தால் போதும். அவர்கள் தரும் பதிலை கொண்டு இனி நம் கீழக்கரை நகரின் எதிர்கால பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வுகளை பெறலாம்.



You must be logged in to post a comment.