மதுரை ss colony பாரதியார் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் சமூக பணிகளில் மிகவும் ஆர்வம் காட்டக்கூடியவர். இவருக்கு வயது 42, இவர் இரவு அவருடைய இல்லத்தில் புதிதாக குடிநீர் தொட்டி அமைக்கும் பணியை பார்வையிட சென்ற போது கால் தவறி விழுந்துள்ளார்.
இச்சம்பவத்தில் அவர் காங்கிரட் போட வைத்திருந்த
கம்பியில் அவருடைய வயிற்றில் குத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆனால் இவர் விபத்தில் இறந்தாலும், கண் தானம் செய்வதற்காக பதிந்து வைத்திருந்ததால், அவருடைய குடும்பத்தார் கண் தானம் செய்ய உடனடியாக ஏற்பாடுகளை செய்து, பிறருக்கு கண் பார்வை தெரிய காரணமாக இருந்துள்ளனர். இவ்விபத்தை குறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தி:- வி.காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.