இஸ்லாமிய மரபுகளுக்கு எதிராக செயல்ப்பட்ட எம்பி அன்வர் ராஜா அவர்களை உடனே வஃக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து தமிழக அரசு நீக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இராம்நாடு பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அன்வர் ராஜா எம்பி சமீபத்தில் யாகம் நடத்தி இஸ்லாமிய மரபுகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார்.
தன்னை முஸ்லீம் என்று அடையாளப்படுத்திக்கொண்டு இதுபோன்று செயல்பாடுவது முஸ்லீம்களையும், சமுதாயத்தையும் கேவலப்படுத்துவதாக உள்ளது ஆகையால் தமிழக அரசு எம்பி அன்வர்ராஜாவுக்கு கொடுத்து உள்ள வஃக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ அப்துல் ரஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.




You must be logged in to post a comment.