தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்கும் நிலையை மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பல வியாபார ஸ்தலங்களில் காண முடிகிறது.
பிளாஸ்டிக் பொருளை தடை செய்ய அமைக்கப்பட்ட குழு எங்கே செயல்பாட்டில் உள்ளதா?? என மதுரை மக்கள் சந்தேக கேள்வியை எழுப்புகிறார்கள். மதுரை திருப்பரங்குன்றம் பகுதிகளிலுள்ள ஓட்டல்களில் தாரளமாக பிளாஸ்டிக் கப்புகள் பயன்பாட்டில் உள்ளது. இதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் பிளாஸ்டிக் பொருளை விற்பனை செய்யும் மற்றும் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
வி.காளமேகம் மதுரை மாவட்டம்







You must be logged in to post a comment.