திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வீலி நாயக்கன்பட்டி கிராமத்தில் அகில உலக புற்றுநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை அமைப்பு தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு முகாமில் பான்மசாலா போதை பாக்கு மற்றும் புகையிலை சிகரெட் போன்ற புகையிலை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய புகையிலையை பல இடங்களில் பள்ளிக்கூடம் அருகே மாணவ-மாணவிகள் வாங்கி உட்கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இதனை முழுமையாக தடுக்க கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிகழ்ச்சியில் புகையிலை எதிர்ப்பு பிரச்சார இயக்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் வனிதா பிரியா, திட்ட இயக்குனர் பன்னீர்செல்வம், திட்ட அலுவலர் ரம்யா களப்பணியாளர்கள் பிரகாஷ் மற்றும் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.