நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், பெத்தநாடார்பட்டி ஊராட்சி, நவநீத கிருஷ்ணபுரத்தில் ஆற்றுத்தண்ணீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை.
இதனால் இந்த பகுதி பொதுமக்கள் குடிதண்ணீரின்றி மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.