இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் நடந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயானிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார்.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.தங்கவேல் வரவேற்றார். தலா ரூ.54 ஆயிரம் மதிப்பில் 10 பயனாளிகளுக்கு இனைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் வாகனங்களை நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர் ராஜா வழங்கினார்.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ. அண்ணா துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடநீக்கியல் வல்லுநர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.
செய்தி:- முருகன்




You must be logged in to post a comment.