18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » இஸ்லாம் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாநில அளவிளான கிராத் போட்டியில் பரிசு வென்ற முகைதீனியா பள்ளி மாணவி…

மாநில அளவிளான கிராத் போட்டியில் பரிசு வென்ற முகைதீனியா பள்ளி மாணவி…

எழுதியவர்: ஆசிரியர் December 30, 2018, 6:42 pm

கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிளான ஆண்ககளுக்கான குர்ஆன் கிராத் போட்டி 29/12/2018 அன்று நடைபெற்றது. இப்போட்டிகள் இஸ்லாமியக் கலாச்சார அறக்கட்டளை, கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தின.

இப்போட்டி ஆண்களுக்கு மட்டும் என்று நிர்ணயித்து இருந்தாலும் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவிகளும் அதிகமாக கலந்து கொண்டதால், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 15வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவாக மாணவிகளுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன். இதில் கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியைச் சார்ந்த செய்யது அல் முஃபலிகா என்ற மாணவி முதல் பரிசை வென்றார்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் தாளாளர், முதல்வர், பொருளாளர் மற்றும் அனைத்து கல்விக் குழு உறுப்பினர்களும் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!