17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பு மாநாட்டில் கீழக்கரை இளைஞருக்கு பாராட்டி விருது..

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பு மாநாட்டில் கீழக்கரை இளைஞருக்கு பாராட்டி விருது..

எழுதியவர்: ஆசிரியர் September 24, 2018, 12:31 am

திருச்சியில் இன்று (23/09/2018) கூட்ட அரங்க கலை அரங்கில் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பு (Coordination of Consumer Association – Tamilnadu (CAT)) பொதுக்குழு மாநாடு நடைபெற்றது.

இந்ந பொதுக்குழு மாநாட்டில் தமிழகத்தில் சிறப்பாக நுகர்வோர் சேவை புரிந்தவர்களை அடையாளம் கண்டு பாராட்டு விருது வழங்கப்பட்டது.

இதன் வரிசையில் கீழக்கரையைச் சார்ந்த சைய்யது இபுராஹிம் என்பவருக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த நுகர்வோர் செய்தமைக்காக பாராட்டு விருது வழங்கப்பட்டது.  இவர் கீழக்கரையில் பல வருடங்களாக இரத்த பரிசோதனை நிலையம் வைத்தும், தேவையுடையவர்களுக்கு வீட்டிற்குள் நேரில் சென்று பல பரிசோதனைகள் செய்து சேவைகள் செய்து வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது. இந்த விருதை திருச்சி ஆட்சியர் அவருக்கு வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!