18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சுதந்திர தின விழாவில் பணி பாராட்டு சான்றிதழ்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சுதந்திர தின விழாவில் பணி பாராட்டு சான்றிதழ்..

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2018, 6:35 pm

இராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றத் தடுப்பு, சட்ட விரோத மது விற்பனை தடுப்பு மற்றும் காவல் துறை சார்ந்த பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

சான்று பெற்றவர்கள் :  காவல்  கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை, காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் (மது விலக்கு, பரமக்குடி) , கேணிக்கரை இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், எஸ்.ஐ., கள் ஜெய்குமார் (தனி பிரிவு), கணேசலிங்க பாண்டி (கொடூர குற்ற பிரிவு), மண்டல மாணிக்கம் எஸ்.ஐ., மதுமதி, சிறப்பு எஸ்.ஐ.,கள் ஆசைத்தம் பி (மாவட்ட குற்ற ஆவண பிரிவு), அர்ச்சுணன் (மாவட்ட குற்றப்பிரிவு), முத்துச்சாமி (கமுதி) , குமார் ( ராமநாதபுரம் பஜார்), செந்தில்குமார் (தேவிபட்டினம்), ராஜாராம் (கீழ செல்வனூர்), தலைமை காவலர்கள் பூமிநாதன் (கேணிக்கரை), முனியசாமி (கமுதி), மகாலிங்கம் (அபிராமம்), ராதாகி ருஷ்ணன் (அபிராமம்), தில்லை முத்து (ராமநாதபுரம் ஆயுதப்படை மோப்ப நாய் பிரிவு), முதல் நிலை காவலர்கள் கிருஷ்ணவேல் (கீழத்தூவல்), கார் வண்ணன் (திருப்பாலைக்குடி), ஆனந்த குமார் (பரமக்குடி டவுன்), பாலமுருகன் (ராமநாதபுரம் டவுன்), நாகநாத சேதுபதி (கேணிக்கரை), ராஜகுரு (சத்திரக்குடி), வேதமாணிக்கம் ( பெருநாழி), கோபிநாதன் (முதுகுளத்தூர்), போலீஸ்காரர்கள் முரளி பிரசாத் (அபிராமம்), துரைராஜ் (தொண்டி ), சரவணகுமாரி (கடலாடி), மாவட்ட காவல் அலுவலக கண்காணிப்பாளர்கள் வசந்தி, புனிதா, உதவியாளர்கள் இளங்கோ, கஜேந்திரன், இளநிலை உதவியாளர் சரவணன், அலுவலக உதவியாளர் சகுந்தலா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 09/8/2018 அன்று தேவிபட்டினம் அருகே பழனி வலசையில் பெண்களிடம் வழிப்பறி செய்து விட்டு காரில் தப்பிய கொள்ளையர்களை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்த பி.கொடிக்குளம் கேசவன், திம்மம்பட்டி பாண்டித்துரை, தேவிபட்டினம் வைரவ கேசு மற்றும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகளவு ரத்த தான முகாம்கள் நடத்தி அரசு ரத்த வங்கிக்கு ரத்தம் சேகரிப்பு பணியை பாராட்டி ஆசிரியர் அய்யப்பனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

காவல் சரக துணை தலைவர் காமினி, காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, கூடுதல் கண்காணிப்பாளர்கள் வெள்ளைத்துரை, கண்ணன், காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன், தனி பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ ஆகியோர் பாராட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!