17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » இராமநாதபுரத்தில் விண்டிலேட்டருடன் உள்ள ஆம்புலன்ஸ்…இசுலாமிய ஜனநாயக பேரவை சார்பாக முயற்சி..

இராமநாதபுரத்தில் விண்டிலேட்டருடன் உள்ள ஆம்புலன்ஸ்…இசுலாமிய ஜனநாயக பேரவை சார்பாக முயற்சி..

எழுதியவர்: ஆசிரியர் July 9, 2018, 3:53 pm

இராமநாதபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இசுலாமிய ஜனநாயக பேரவையின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர் யாசர் அராபத் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சீனிமுகம்மது சபீர் தலைமை வகித்தார். மாநில துணை அமைப்பாளர் சிறுத்தை முத்துவாப்பா முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் முகம்மது யாசின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

மாவட்ட துணை அமைப்பாளர் முகம்மது நபீல், தொகுதி செயலாளர் அப்துல் ரகுமான், கீழக்கரை நகர் செயலாளர் இதயாத்துல்லா, நகர் பொருளாளர் சபீர், பாதுஷா,மண்டபம் ஒன்றிய செயலாளர் சிகோ ஆறுமுகம், கல்வி பொருளாதார மாநில துணை செயலாளர் கிட்டு, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் ஹிலால்தீன், ஒன்றிய பொருளாளர் சுக்கூர்,  மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முகம்மதுகான், மாவட்ட பொருளாளர் சிராஜூதீன், தங்கச்சிமடம் நகர் செயலாளர் மீரான்,  மாவட்ட வணிகரணி செயலாளர் பண்ணை செய்யது, கீழக்கரை துணை அமைப்பாளர் அகம்மது அசன், நகர் பொருளாளர் காதர்பாஷா ஆகியோர் கட்சியின் வளர்ச்சி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து பேசினர். கூட்டத்தில்.   வென்டிலேட்டரிடன் உள்ள ஆம்புலன்ஸ் வாங்கி மக்கள் சேவைக்காக விடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக ஜூனைத் நன்றி தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!