17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் மீனவர் 4 பேர் சிறைபிடிப்பு..

இராமேஸ்வரம் மீனவர் 4 பேர் சிறைபிடிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் July 8, 2018, 10:36 am

இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று (07/7/18) காலை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தொழிலுக்குச் சென்றனர். பகலில் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகுகள் இரவு வேளையில் கச்சத்தீவு பகுதிக்கு நகர்ந்தன.

இன்று அதிகாலை நெடுந்தீவுக்கும் – கச்சத்தீவிற்கும் இடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் சதீஷ் என்பவரது படகில் சென்ற மீனவர்கள் தினேஷ், இருளாண்டி, கோவிந்தன் உள்பட 4 பேரை படகுடன் இலங்கை கடற்படை சிறை பிடித்து காங்கேசன் துறைமுகம் அழைத்துச் சென்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!