29 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானை திரௌபதி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா: பீமன் வேடமணிந்து பக்தர்கள் வீதி உலா.!

திருவாடானை திரௌபதி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா: பீமன் வேடமணிந்து பக்தர்கள் வீதி உலா.!

எழுதியவர்: Baker BAker March 29, 2026, 8:41 pm

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நகரின் வடகிழக்குத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு தர்மர் மற்றும் அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோவில் பங்குனித் திருவிழா பக்தி மிகுந்த சூழலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்ட இத்திருக்கோவில், மகாபாரதக் கதையின் முக்கிய நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதால், பக்தர்களிடையே தனித்துவமான முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த ஆண்டுக்கான பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று, பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவிழாவின் நான்காம் நாளான இன்று, மகாபாரதக் கதையை நினைவூட்டும் வகையில் ‘பீமன்’ வீதி உலா சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் விரதமிருந்து, பீமனை பிரதிபலிக்கும் வண்ணமயமான உடைகள், கைத்தடிய்கள் மற்றும் ஆயுதங்களுடன் வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர். அவர்கள் வீரத்தையும் பக்தியையும் ஒருங்கிணைத்து வெளிப்படுத்திய இந்த நிகழ்வு, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும், சிறுவர்கள் பலரும் மகாபாரதம் மற்றும் பிற புராணக் கதாபாத்திரங்களின் வேடங்களில் பங்கேற்று விழாவிற்கு கூடுதல் சிறப்பூட்டினர். ஊர்வலத்தின் போது பக்தர்கள் “கோவிந்தா” என முழக்கமிட்டு ஆன்மீக உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இன்றைய நிகழ்ச்சிகளின் முக்கிய அம்சமாக, இரவு நேரத்தில் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீக நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

இந்த விழாவைக் காண திருவாடானை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினரும், வடக்குத் தெரு பொதுமக்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

பாரம்பரியம், பக்தி, மகாபாரதக் கதைகளின் நினைவுகளை ஒருங்கிணைக்கும் இத்திருவிழா, திருவாடானை பகுதி மக்களின் கலாச்சார அடையாளமாகத் திகழ்கிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!