ராணுவ விமானம் கோர விபத்து.. வானில் இருந்து தரையில் மோதியதில் 34 வீரர்கள் பலி.. கொலம்பியாவில் சோகம்
எழுதியவர்: ஆசிரியர் March 24, 2026, 11:31 pm

கொலம்பியாவின் புடுமாயோ மாகாணத்தில் உள்ள புவேர்டோ லெக்விசாமோவில் ராணுவ விமானம் இன்று விபத்துக்குள்ளானது. விமானம் வானில் இருந்து கீழே விழுந்து, தரையில் மோதியதில் வெடித்து தீப்பற்றியது. இந்த விபத்தில் 34 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த விபத்தை மிகவும் கவலையுடன் எடுத்துக்கொண்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.



You must be logged in to post a comment.