ராணுவ விமானம் கோர விபத்து.. வானில் இருந்து தரையில் மோதியதில் 34 வீரர்கள் பலி.. கொலம்பியாவில் சோகம்
எழுதியவர்: ஆசிரியர் March 24, 2026, 9:31 pm

கொலம்பியாவின் புடுமயோ மாகாணத்தில் உள்ள புயர்டோ லெகுயிசாமோவில், ராணுவ விமானம் இன்று விபத்துக்குள்ளானது. விமானம் வானில் இருந்து தரைக்கு விழுந்து, மண்ணில் மோதியதும் உடனே வெடித்து, தீப்பிடித்தது. இந்த விபத்தில் 34 வீரர்கள் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்படுகிறது. விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் நாட்டின் ராணுவத்திற்கும், பொதுமக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியளித்துள்ளது.



You must be logged in to post a comment.