எல்.பி.ஜி உற்பத்தி 31% அதிகரிப்பு; மக்கள் பதற்றப்பட வேண்டாம்.- மத்திய அரசு.
நாட்டில் LPG சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில், சுத்திகரிப்பு நிலையங்களில் (refineries) LPG உற்பத்தி சுமார் 31% அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவினாலும், நாட்டில் LPG விநியோகம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் பதற்றப்பட வேண்டாம் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் நாட்டின் அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் முழு திறனில் செயல்பட்டு வருகின்றன என்றும், தேவையை சமாளிக்க கூடுதல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




You must be logged in to post a comment.