மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி ஒன்றிய ஐக்கிய விவசாய சங்கம் சார்பில் அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் பிரச்சனையில் அமைதி நிலவ மத்திய அரசு தலையிட கோரி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இஸ்ரேல் துவக்கியுள்ள போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் உலக நாடுகளின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்த, ஈரான் மதத் தலைவர் அயோத்துல்லா கோமேனி படுகொலை செய்யப்பட்டதை, இந்திய அரசு வன்மையாக கண்டிக்க கோரியும் போரில் 165 பள்ளி மாணவிகள் உட்பட ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை இந்தியா வன்மையாக கண்டிக்க கோரியும் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்த வேண்டுமென்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணிq சார்பில்ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வேல்பாண்டி தலைமையில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஜோதிராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினை கண்டித்து கண்டன உரையாக சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ,பகத்சிங், நிவேதா (தமிழ்நாடு பெண்கள் சங்கம்) முத்துப்பாண்டி (காங்கிரஸ் நகர தலைவர்), தங்கராஜ் (தி.க) அண்ணாத்துரை (மக்கள் சட்ட உரிமை இயக்கம்), கந்தவேல், விவேக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தானம் நிறைவுரையாற்றினர்.
சோழவந்தானில் ஈரான் போர் பிரச்சனையில் அமைதி நிலவ மத்திய அரசு தலையிடக் கோரி ஐக்கிய விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
எழுதியவர்: mohan March 10, 2026, 9:27 pm




You must be logged in to post a comment.