17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாம் தமிழர்கட்சி கீழக்கரை நகர் சார்பாக நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது..

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாம் தமிழர்கட்சி கீழக்கரை நகர் சார்பாக நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது..

எழுதியவர்: ஆசிரியர் June 19, 2018, 9:58 pm
கீழக்கரையில்  நாம் தமிழர்கட்சி கீழக்கரை நகர் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு,  புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்க்கு கீழக்கரை காவல்துறை சார்பு ஆய்வாளர் செந்தில் முருகன் கலந்து கொண்டு மாணவ, மாணவியற்க்கு நோட்டு புத்தங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக  நகர் துனைச்செயலாளர் யாசர் அரபாத் காவல் ஆய்வாளருக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கினார். பின்னர் நாம் தமிழர் கட்சி  நகர் பொருளாளர் அயன்ராஜ் தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்து   நகர் தலைவர் சுகுமார், நகர் செயலாளர் கீழை பிரபாகரன், நகர் இணைச்செயலாளர் ஹபில் ரஹ்மான், நகர் தொழிலாளர் பாசறை பழனிபாபா,  இளைஞர்பாசறை செயலாளர் வாசிம் அக்ரம், இளைஞர்பாசறை இனைச்செயலாளர் இக்ரம்தீன், மாணவர் பாசறை செயலாளர் இனாமுல் ஹசன், மாணவர்பாசறை இனைச்செயலாளர் கா.வாசிம் அக்ரம், குருதிக்கொடை பாசறை செயலாளர் சபரி போன்றோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!