20 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ‘பாபர் மசூதி’ என்ற பெயரை பயன்படுத்த தடை விதிக்கவும், அந்தப் பெயரில் மசூதி கட்ட அனுமதி வழங்க வேண்டாம் என்று மனு! தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்..

‘பாபர் மசூதி’ என்ற பெயரை பயன்படுத்த தடை விதிக்கவும், அந்தப் பெயரில் மசூதி கட்ட அனுமதி வழங்க வேண்டாம் என்று மனு! தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்..

எழுதியவர்: Askar February 20, 2026, 10:00 pm

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ளது பாபர் மசூதி. 2019-ஆம் ஆண்டு பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் அயோத்தியில் பாபர் மசூதியை மீண்டும் கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தது. சமீபத்தில் மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதியை கட்டப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி ஹுமாயூன் கபீர் அறிவித்திருந்தார். இது அரசியல் ரீதியிலாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பின் பின்னணியில் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் புதிய மசூதி கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘பாபர் மசூதி’ என்ற பெயரை பயன்படுத்த தடை விதிக்கவும், அந்தப் பெயரில் மசூதி கட்ட அனுமதி வழங்க வேண்டாம் என்றும் மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தார். மேலும் இத்தகைய பெயர்களுக்கு அனுமதி கோரி அதிகாரிகளை நாடும்போது அதிகாரிகள் அதற்கான அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் விக்ரம் நாத் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எந்த முகாந்திரமுமின்றி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!