தென்காசி அருகே அதிகாலையிலேயே பற்றி எரிந்த இந்தியன் வங்கி.. தீயணைக்கும் பணி தீவிரம்
எழுதியவர்: ஆசிரியர் February 16, 2026, 1:31 pm

தென்காசி மாவட்டத்தில், சங்கரன் கோயில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள இந்தியன் வங்கி கிளையில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. வங்கியின் ஜன்னல்களில் இருந்து கறுப்பு புகை வெளியே வந்ததை பார்த்து, தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்து, தீயை அணைக்க முயற்சிக்கிறார்கள். தீ விபத்தின் காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.



You must be logged in to post a comment.