கீழக்கரையில் இன்று (10-02-2017) மீண்டும் பைக்கினால் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் மரணம். இவர் கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த ரசாக் அவர்களின் மகன் முஹம்மது மஹ்தும் ஆவார். இவர் சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் பட்ட படிப்பு முடித்தவர்.

இதில் யாரைக் குற்றம் காண்பது, சிறு வயதிலேயே பிள்ளைகள் ஆசைப்படுவதனால் பைக் வாங்கி கொடுக்கும் பெற்றோர்களையா?? கையில் பைக் கிடைத்தவுடன் கண் தெரியாமல் வேகமாக ஓட்டும் சிறார்களையா? அல்லது எந்த அடிப்படை தகுதியும் இல்லாமல் வண்டி ஓட்டுபவர்களை தண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறையா?? யார் இதற்கு பொறுப்பாளி???




You must be logged in to post a comment.