மகளிருக்கு அரசு வழங்கிய ரூ.5,000 தொகை திருப்பி எடுக்கப்படும் என்று வதந்தி சமூக வலை தளங்களில் வதந்தி பரவி வருவதாக தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
பரவிய செய்தி : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கிய உரிமைத் தொகையை வங்கியிலிருந்து மாலைக்குள் எடுக்காவிட்டால் பணம் திருப்பி எடுக்கப்படும் என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? : தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான முன் பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் சேர்த்து ரூ.5 ஆயிரம் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்குச் செலுத்தியது. இத்தொகையை அன்று மாலைக்குள் வங்கியிலிருந்து எடுத்து விட வேண்டும் என்பது முற்றிலும் தவறான தகவல்.
தமிழ்நாடு அரசு இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என தகவல் சரிபார்ப்பகத்தால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவலைப் பரப்பாதீர்!




You must be logged in to post a comment.