உசிலம்பட்டியில் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்து திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,
மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்காமல் வஞ்சித்த பாஜக அரசு கண்டித்து தமிழ்நாடு முழுவதும், திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாரத ஸ்டேட் வங்கி முன்பு உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கப்பாண்டியன் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,
மத்திய அரசுக்கு எதிராகவும், அதிமுக அரசுக்கு எதிராகவும் கண்டன கோசங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி, முருகன்,பழனி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்




You must be logged in to post a comment.